வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

News image
கோப்புப்படம்.
Updated On :18 ஜூலை 2025, 12:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அபுஜ்மத் வனப்பகுதியில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது, துப்பாக்கிச் சண்டை நடந்தது.

"பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும்இடையே பிற்பகல் முதல் பலமுறை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 6 நக்சல்களின் உடல்கள், ஏகே-47/எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

summary

Six naxalites were killed in an encounter with security personnel in Narayanpur district of Chhattisgarh on Friday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.