ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தேவி வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கிராம பாதுகாப்பு காவலர் சந்தீப் குமாரின் துப்பாக்கியில் இருந்து குண்டு திடீரென அந்த பெண் மீது பாய்ந்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டார்.
குண்டு வேண்டுமென்றே சுடப்பட்டதா அல்லது தற்செயலாக சுடப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
A 35-year-old woman was killed after being hit by a bullet from the weapon of a village defence guard in a remote village in Jammu and Kashmir's Kishtwar district, officials on Saturday said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு காஷ்மீரில் முதல் திரைப்பட விழா..! 50 நாடுகளில் இருந்து 875 படங்கள்!

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! ஒருவர் பலி! | Jammu & Kashmir

33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்கள் அடங்கிய 9-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



