நைஜரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நைஜரின் டோசோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி, அங்குள்ள கட்டுமானப் பணிகளுக்கு, அந்நாட்டு ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அப்போது, அங்கு திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவரை அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக, நைஜர் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடத்தப்பட்ட ரஞ்சித் சிங்கின் மனைவி ஷீலா தேவி கூறுகையில், ஜூலை 15 முதல் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. பலமுறை விசாரித்த பிறகுதான், பயங்கரவாதிகள் அந்த இடத்தைத் தாக்கியதாகவும், ரஞ்சித், ஒரு காட்டுப் பகுதியை நோக்கி ஓடிவிட்டதாகவும் நிறுவனம் குடும்பத்தினருக்குத் தெரிவித்தது.
தனது கணவரின் விடுதலைக்காக நிறுவனம் எந்த வெளிப்படையான முயற்சிகளையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். அவரது கடத்தல் அவர்கள் பற்றி கேள்விப்பட்ட பிறகு அதிர்ச்சியில் உள்ளனர். தயவுசெய்து என் கணவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வாருங்கள். தனது கணவர் பாதுகாப்பாக திரும்புவதை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக ராம்பன் துணை ஆணையர் முகமது அலியாஸ் கானையும் ஷீலா தேவி சந்தித்துள்ளார். அப்போது இவ்விவகாரம் நைஜரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
Summary
A man from Jammu and Kashmir’s Ramban district has reportedly been abducted by terrorists in Niger, West Africa, during a deadly attack on a construction site in the Dosso region.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!

மோடி தீவிரவாதியா? கார்கே விமர்சனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

தோ்தலில் மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்! - கனிமொழி

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


