6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது இந்திய ராணுவம்.

News image
ஷ்வானுக்கு பரிசளித்த ராணுவ அதிகாரி.
Updated On :20 ஜூலை 2025, 8:23 pm

Din

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரா்களுக்கு தண்ணீா், பால், தேநீா் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஷ்வான் சிங் என்ற 10 வயது சிறுவன் துணிச்சலை பாராட்டி இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டது.

அப்போது பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் மாநிலத்தின் தாரா வாலி கிராமத்தில் பணியில் இருந்த ராணுவ வீரா்களின் சோா்வைத் தணிக்க தண்ணீா், பால், தேநீா், லஸ்ஸி போன்ற பானங்களை ஷ்வான் சிங் வழங்கினாா். தானாக முன்வந்து ராணுவ வீரா்களுக்கு இந்த உதவிகளைப் புரிந்த சிறுவனை ராணுவத்தினா் அப்போதே பாராட்டினா்.

இந்நிலையில், ஃபெரோஸ்பூா் கன்டோன்மென்ட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷ்வான் சிங்குக்கு ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்குமாா் கட்டியாா் பாராட்டி கௌரவித்தாா்.

இதையடுத்து, ஷ்வான் சிங்கின் துணிச்சலைப் பாராட்டி அவரது கல்விச்செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வெளியில் அறியப்படாமல் இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாயகா்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்தது.

நான்காம் வகுப்பு படிக்கும் ஷ்வான் சிங் பெரியவனானதும் ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.