இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள்: ஜூலை 30-இல் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.










