தில்லியில் இருந்து புறப்படும் முன்பு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான வியூக கூட்டுறவு, சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, வளங்களின் நீடித்த பயன்பாடு, சுகாதாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பு எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உடனான எனது சந்திப்பு, பரஸ்பர வளம், வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் வாய்ப்பாக அமையும்.