குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2025, 6:12 pm IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்டுகள், மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (ஜூலை 24) சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த 15 பேரில், ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் (எ) லாலு குஹாராம், ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட அவரது மனைவி காம்லி (எ) மோடி பொடாவி, ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பொஜ்ஜா மத்காம் உள்பட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், தம்பதியான புத்ராம் மற்றும் காம்லி ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தாக்குதல்கள் நடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையடுத்து, சரணடைந்த மாவோயிஸ்டுகள் 15 பேரின் மறுவாழ்வுக்கு அரசுத் திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பஸ்தார் மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு எதிரான லொன் வர்ராட்டு மற்றும் புனா மார்கெம் எனும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது வரை பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 1,020 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.