‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்த சம்பவங்களை முழுமையாக விசாரித்து, கொலை, தீவைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் நீதியின்முன் நிறுத்தும் என்று எதிா்பாா்க்கிறோம்.
சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து வங்கதேச அதிகாரிகளிடம் இந்தியா பல்வேறு வழிகளில் தொடா்ந்து எடுத்துரைத்துள்ளது. சிறுபான்மையினா் உள்பட வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் உயிருக்கும், சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும் முதன்மை பொறுப்பு வங்கதேச அரசுக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் பதிவு: மத்திய அரசு முக்கிய முடிவு

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

தமிழக பேரவைத் தோ்தலில் வெல்வது நாங்களே! மாநிலங்களவையில் திமுக, அதிமுக கருத்து மோதல்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


