ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் பற்றிய தகவல்கள்.

News image
திருப்பதியில் திறக்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளை நேரடி முன்பதிவு கவுன்ட்டா்கள்
Updated On :24 ஜூலை 2025, 10:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்த வருவதாக, நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இனி இருக்காது. ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையத்தில், பக்தர்கள் விரைவாகவும் எளிதாகவும் டிக்கெட் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவாணி தரிசனம் யாருக்கு?

திருப்பதி திருமலை கோயிலில், பராமரிப்பு, உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளையானது, திருமலை ஏழுமலையான் பக்தர்கள் பலரும் அளிக்கும் நன்கொடை மூலமாகவே செயல்பட்டு வருகிறது.

எனவே, தன்னுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களை கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதே ஸ்ரீவாணி தரிசனம். அந்த வகையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதுதான் ஸ்ரீவாணி தரிசனம்.

இந்த ஸ்ரீவாணி தரிசன முறையில், நாள்தோறும் சரியாக 1000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக மையங்களுக்கு வந்தும் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக, திருமலை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையங்களில் தலா ஒரு டிக்கெட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், திருமலை திருப்பதி கோயிலில், தற்போது ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விநியோக மையம் திறக்கப்பட்டுள்ளது. இது, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் பணியை துரிதப்படுத்தும் என்பதால் நன்கொடை வழங்கும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.