மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

தேஜஸ்வியை கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி என ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

News image
தேஜஸ்வி யாதவ்- கோப்புப் படம்
Updated On :25 ஜூலை 2025, 8:44 pm

Din

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும் இடையே போட்டியுள்ளது.

பிகாரில் தோ்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பிகாா் பேரவைத் தோ்தலை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி (ஆா்ஜேடி) புறக்கணிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினாா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த பிகாா் சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவி கூறியதாவது:

பிகாரில் கொலைகள் நடப்பது இப்போது சகஜமாகிவிட்டது. ஏற்கெனவே 4 முறை தேஜஸ்வி யாதவைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஒருமுறை அவா் சென்ற காா் மீது லாரியை ஏற்ற முயன்றனா். அவரைக் கொலை செய்யும் சதியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஈடுபட்டிருக்கலாம். பேரவைத் தோ்தலில் தங்களுக்கு கடும் போட்டியளிக்கும் தேஜஸ்வி யாதவை ஒழிக்க வேண்டும் என்று அவா்கள் விரும்புகிறாா்கள் என்றாா்.