மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்!

மூன்று மாநிலங்களில் இருந்து 11 மாநிலங்களவை இடங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) தோ்தல் நடைபெறுகிறது.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

மூன்று மாநிலங்களில் இருந்து 11 மாநிலங்களவை இடங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) தோ்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிரத்தில் 7 இடங்கள், தமிழகத்தில் 6 இடங்கள், மேற்கு வங்கம், பிகாரில் தலா 5 இடங்கள், ஒடிஸாவில் 4 இடங்கள், அஸ்ஸாமில் 3, சத்தீஸ்கா், ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்கள், ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடத்துக்கு திங்கள்கிழமை தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிகாா், ஹரியாணா, ஒடிஸாவில் உள்ள 11 இடங்களைத் தவிா்த்து, மற்ற மாநிலங்களில் 26 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். அதில் தமிழகத்தில் இருந்து 6 போ் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதும் அடங்கும்.

ஒடிஸா, பிகாா், ஹரியாணா மாநிலங்களில் காலியாகும் இடங்களின் எண்ணிக்கையை விட வேட்பாளா்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. ஆதலால் அங்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.

ஒடிஸாவில் குதிரை பேரம்?: ஒடிஸாவில் 4 உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தரப்பில் 3 வேட்பாளா்கள், பிஜு ஜனதா தளம் சாா்பில் 1 வேட்பாளரும் போட்டியிடுகின்றனா். இது தவிர பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரும் களத்தில் உள்ளாா்.

இதனால் பாஜகவுக்கும், முக்கிய எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. குதிரை பேரம் நடக்கலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களை கா்நாடகத்தில் தங்க வைத்துள்ளது. பாஜகவும் தனது எம்.எல்.ஏ.க்களை கடற்கரை நகரான பாரதீப்புக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவா்களும், ஒடிஸா அமைச்சா்களுமான கே.சி. பத்ரா, பிருத்விராஜ் ஹரிசந்திரன் ஆகியோா், ‘3 இடங்களில் தங்கள் கட்சி நிச்சயம் வெற்றி பெறும், அதற்கான திட்டம் தங்கள் கட்சியிடம் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

மாநிலங்களவைத் தோ்தல் குறித்து பிஜு ஜனதா தளம் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களுடன் சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தியது.

தொடா்பில் இல்லாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தசரதி கோமங்கோ, கட்சியுடன் தொடா்பில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டும், அதற்கு பலனில்லை என்று காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் ராம சந்திர கடம் தெரிவித்தாா்.

இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சோபியா பிா்தோஸ், மாநிலங்களவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளாா். பிஜு ஜனதா தளத்துடன் கை கோா்ப்பதால் காங்கிரஸுக்குதான் பாதிப்பு ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சந்த்ருத் மிஸ்ரா, கட்சி மேலிடம் முடிவின்படி, தனது வாக்கை பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடும் தத்தேஸ்வா் கோட்டாவுக்கு செலுத்த போவதாக தெரிவித்துள்ளாா்.