அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: மத்திய அரசு விளக்கம்

News image
மோடி - டிரம்ப் பேச்சு- கோப்புப்படம்
Updated On :30 ஜூலை 2025, 3:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா மீது 25 சதவீத வரியுடன் கூடுதலாக அபராதமும் விதிப்பதாகவும், ஆகஸ்ட் 1 முதல் இந்த வரி விதிப்பானது அமலாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூலை 30) அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியா - அமெரிக்கா இருநாட்டு வர்த்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்மூலம், நியாயமான, சமமான மற்றும் இருதரப்புக்கும் பரஸ்பர பலனளிக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும். அந்த இலக்கை அடைவதில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது.

நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் ஆகியோரின் நலனை முன்னிலைப்படுத்தவும் பாதுகாக்கவும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் போலவே, அதிலும் குறிப்பாக பிரிட்டனுடனான சமீபத்திய விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது போலவே, நமது தேச நலனைக் காக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

press release by the Ministry of Commerce & Industry: "The Government has taken note of a statement by the US President on bilateral trade. The Government is studying its implications."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.