நமது நிருபர்
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற சிந்தூர் ஆபரேஷன் சிறப்பு விவாதத்தில் என்.ஆர்.இளங்கோ பங்கேற்றுப்பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிஆர்எஃப் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்றும் அது ஒரு ராஜீய வெற்றி என்றும் கூறியதை பாராட்டுகிறோம்.
ஆனால், பிரதமரோ, வெளியுறவு அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ பாகிஸ்தான் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் டிரம்ப் கூறியது தவறு, பொய் என்ற ஒற்றை வரியைத்தான் மத்திய அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. இறந்தவர்களின் சடலங்களை ஏற்கெனவே கைதாகி காவலில் உள்ள நபர்களைக் கொண்டு ஏன் அடையாளம் காணக் கூடாது? இந்த விவாகரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்தையைப் போல "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.