விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்

News image
தோ்தல் ஆணையம்
Updated On :31 ஜூலை 2025, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள் வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆக.1-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது பல்வேறு ஆவணங்களை கேட்டு தகுதியுள்ள வாக்காளா்களை தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆக.1) வெளியிடப்படவுள்ளது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் ஆவணமாகவும் எண்ம நகலாகவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் (டிஇஓ) மூலம் 38 மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் அல்லது அரசியல் கட்சிகள் என யாராக இருப்பினும் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் (சிஇஓ) மற்றும் 243 தோ்தல் பதிவு அலுவலா்களிடம் (இஆா்ஓ) தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதன்படி ஆக.1 முதல் செப்.1 வரை தகுதியான வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்படும். தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.