6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் வாக்கு அரசியலில் ஈடுபடும் பாஜக - பகவந்த் மான்

News image
பகவந்த் மான்- படம் | பகவந்த் மான் எக்ஸ் பதிவு
Updated On :3 ஜூன் 2025, 12:00 pm

DIN

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, அங்கு அனைத்துக் கட்சிகளும் படுதீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பாஜகவினர் ஆபரேஷன் சிந்தூர் பெயரில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதாக பரவலாக பேசப்படுவது குறித்து முதல்வர் பகவந்த் மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய பகவந்த் மான் கூறியிருப்பதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாஜக வாக்கு சேகரிக்கிறது. இவர்கள்(பாஜக) ‘சிந்தூரை(நெற்றியில் இடும் திலகம்)’ கேலிக்குரியதொரு விஷயமாக மாற்றியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் சிந்தூரத்தை அனுப்பி வைக்கின்றனர். பிரதமர் மோடியின் பெயரால் நீங்கள் உங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொள்வீர்களா?

இது என்ன ‘ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா?’” என்று விமர்சித்துள்ளார்.

பகவந்த் மான் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”பகவந்த் மான் வரம்ம்புகளை மீறி பேசியிருக்கிறார். அவருக்கு பொறுப்புணர்வு துளியளவும் இல்லை. இந்திய ராணுவத்தை அவர் விமர்சித்திருக்கிறார். புனிதமானதாக கருதப்படும் சிந்தூரத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார். தேச நலனுக்கு எதிரான உணர்வை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.