புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

News image
தில்லி முதல்வர் ரேகா குப்தா. - கோப்புப்படம்.
Updated On :7 ஜூன் 2025, 8:01 am

DIN

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி நபரான அவர் அடிக்கடி தனது அடையாளத்தை மாற்றிக்கொள்வதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரவு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் அவசர உதவி எண் 112ஐ தொடர்புகொண்டு அவர் மிரட்டல் விடுத்தார்.

உடனே இதுகுறித்துதில்லி போலீஸுக்கு காசியாபாத் போலீஸார் தகவல் கொடுத்தனர். மேலும் பஞ்சவதி காலனிக்கு ஒரு குழுவைவும் அனுப்பினர். அங்கிருந்துதான் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த நபர் பிடிபடாமல் தப்பினார் என்று காசியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி தெரிவித்தார்.

காசியாபாத் காவல்துறை மற்றும் தில்லி காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் திரிபாதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரிக்கப்படுகிறார்.

விசாரணையின் போது, ​​தான் போன் செய்தபோது குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.