பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மறுவரையறை செய்யப்பட்ட்டுள்ளது.
அறிவியல், கல்வி, விளையாட்டு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஆயுதப்படைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
தூய்மை இந்தியாவிலிருந்து ஜன்தன் கணக்குகள் வரையில் பல்வேறு முயற்சிகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதைத்தான் கவனமாகக் கொண்டுள்ளன.
ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மூலம் புகையில்லாத சமையலறை, லட்சக்கணக்கான பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா கடன்கள் மூலம் அவர்களின் கனவுகளை அடைய முடிந்தது.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் பெண்களின் பெயரில் வீடுகளும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தின. மகளைக் காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கற்பியுங்கள் (Beti Bachao Beti Padhao) என்ற அறிவுறுத்தலின் திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கத்தைத் தூண்டிவிட்டது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

சபரிமலையில் குற்றமிழைத்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தண்டிக்கப்படும்: பிரதமா் மோடி வாக்குறுதி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


