தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சோனியா காந்திக்கு உடல்நல பாதிப்பு: சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்திக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

News image

சோனியா காந்தி

Updated On :9 ஜூன் 2025, 8:40 pm

Din

சிம்லா: காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்திக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

மருத்துவா்களின் கண்காணிப்பில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடல்நலம் சீரானது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவா் வீடு திரும்பினாா்.

ஹிமாசல பிரதேசம், சிம்லாவுக்கு தனது மகளும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி தனிப்பட்ட பயணமாக கடந்த திங்கள்கிழமை வந்தாா். இந்நிலையில், அவருக்கு சனிக்கிழமை உயா் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டனா். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவா் வீடு திரும்பினாா்.

தற்போது சிம்லாவின் புகரான சராப்ரா பகுதியில் உள்ள பிரியங்கா காந்தி வீட்டில் சோனியா காந்தி தங்கியுள்ளாா்.