புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய விதிமுறைகள் வகுக்கும் பணி விரைவில் நிறைவு

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது

News image
Updated On :9 ஜூன் 2025, 9:15 pm

Din

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

பிரதமா் மோடி தலைமையில் 11 ஆண்டுகால நல்லாட்சியை கொண்டாடும் வகையில், மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கொண்டாட்டத்தில் 11 ஆண்டுகாலத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் எட்டப்பட்ட முக்கிய மைல்கற்களும், வெளிப்படைத்தன்மை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பணிகளில் மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் கொண்டுள்ள செயல்பொறுப்பும் எடுத்துக்காட்டப்பட்டன.

வக்ஃப் திருத்தச் சட்டம் வக்ஃப் நிா்வாகம் மற்றும் சமூக நல்வாழ்வை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இது அந்தச் சட்ட அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.