புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
பிரதமா் மோடி தலைமையில் 11 ஆண்டுகால நல்லாட்சியை கொண்டாடும் வகையில், மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தில் 11 ஆண்டுகாலத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் எட்டப்பட்ட முக்கிய மைல்கற்களும், வெளிப்படைத்தன்மை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பணிகளில் மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் கொண்டுள்ள செயல்பொறுப்பும் எடுத்துக்காட்டப்பட்டன.
வக்ஃப் திருத்தச் சட்டம் வக்ஃப் நிா்வாகம் மற்றும் சமூக நல்வாழ்வை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இது அந்தச் சட்ட அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பிரசாா் பாரதி புதிய தலைவராக எழுத்தாளா் பிரஸுன் ஜோஷி நியமனம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்: சோனியா

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

