மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் கரோனா பாதிப்பு ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது.

News image
கரோனா பரிசோதனை - கோப்புப்படம்
Updated On :10 ஜூன் 2025, 9:18 am

DIN

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட், கேரளம் என தலா ஒருவர் கரோனாவுக்கு பயாகியிருக்கறிர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு பலியான மூன்று பேரும், ஏற்கனவே உடல்நலப் பாதிப்புக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவகள் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இணை நோய் உள்ளவர்களின் இறப்புகளும் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

தில்லியில் 90 வயது பெண்மணி சிறுநீரகம் பாதித்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், அவரது இறப்புக்கு கரோனா காரணமில்லை என்றும், அவர் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஜார்க்கண்டிலும் 44 வயது நபர், அதிக ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பலியானதாகவும் கேரளத்தில் 79 வயது நபர் கரோனாவும் பாதித்து, உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில்தான் பலியானதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பல உடல்நலப் பிரச்னைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அறிந்துகொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அச்சப்பட வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.