ஏர் இந்தியா விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகத் தகவல்!

ஏர் இந்தியா விமான விபத்தில் 7 குழந்தைகள் பயணம்..
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சமீபத்திய தகவலின்படி விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் 2 கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக விமானத்தில் பயணித்த 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அவசரமாக விரைந்துள்ளது.

குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்தையடுத்து அங்கு விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலும் ஆமதாபாத்துக்கு வந்த விமானமும் திறப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com