மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. அதில் 229 பயணிகள் இருந்தனா். இந்த நிலையில், விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதோடு, எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனா். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினா், அதிரடிப் படையினா் உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதுவரை அந்த விமானம் தரையிறங்காமல், வானில் தொடா்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்பு, விமானம் இரவு 11.37 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்த அனைவரும் உயிா் தப்பினா்.

பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும், விமானப் பொறியாளா்கள் குழுவினா் விமானத்துக்குள் சென்று தொழில்நுட்ப கோளாறைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா். அந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தை ‘ரிமோட் ஃபே’ எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக முழுமையாக விசாரணை நடத்துவதற்கு தில்லியில் உள்ள சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.