குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சென்னை வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழப்பு! முழு அவசரநிலையுடன் தரையிறக்கம்!

சென்னை வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழந்தது பற்றி...

News image

சென்னை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் - ANI

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:25 am IST

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் என்ஜின் நடுவானில் செயலிழந்த நிலையில், முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் (6E-723) இயக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 224 பேர் பயணித்தனர். சென்னை விமான நிலையத்துக்கு அட்டவணைப்படி, இரவு 11.30 மணியளவில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நடுவானில் விமானத்தின் இடதுபுற இயந்திரம் செயலிழந்ததால், சென்னை விமான நிலையத்துக்கு அவசர தரையிறக்கத்துக்கு விமானி கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரவு 11.29 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விதிகளின்படி, ’முழு அவசரநிலை’ பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதையடுத்து சற்று தாமதமாக இரவு 11.37 மணியளவில் ஓடுதளம் 25-ல் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு 11.47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு மேல் நிலைமை சீரானது.

இண்டிகோ விமானத்தின் என்ஜின் செயலிழந்தது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Summary

Engine of flight bound for Chennai fails mid-air! Lands under full emergency!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.