எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் எண்ணிக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் தங்கள் சேவையைக் குறைந்துள்ளன. சிங்கப்பூர், துபாய், இலங்கை, அந்தமான், ஹைதராபாத், திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை - சேலம் இடையே 4 விமான சேவைகள் இருந்த நிலையில் 2 ஆகவும் சென்னை - தூத்துக்குடி இடையே 12 விமான சேவைகள் இருந்த நிலையில் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Flight services reduced from chennai airport
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










