/

பேரழிவுக் காட்சிகளால் வேதனை! மோடி

அகமதாபாத் விமான விபத்து பகுதியை பார்வையிட்ட மோடி பதிவு...

News image
அகமதாபாத் விமான விபத்து பகுதியை பார்வையிட்ட மோடி - PTI
Updated On :13 ஜூன் 2025, 6:26 am

DIN

விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், ஆய்வு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,

”அகமதாபாத்தில் விபத்து நேரிட்ட இடத்தை பார்த்தேன். பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிக்கிறது. மீட்புப் பணிகளுக்காக இரவுபகலாக பணிபுரியும் குழுவினரை சந்தித்தேன்.

இந்த நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையத்தில் உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.