ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

News image
Updated On :14 ஜூன் 2025, 6:29 pm

Din

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜூன் 5 ஆம்-தேதி இரவு 9:40 மணியளவில், தனது உறவினா் ஆஷிஷ் ஐஸ்கிரீம் வாங்க வெளியே சென்ாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் ஷிவ் துா்கா விஹாரில் வசிக்கும் அமன் தெரிவித்தாா். ஆஷிஷின் நண்பா் ரிஷப்பின் தந்தைக்கு அமன் தொலைபேசியில் அழைத்தபோது, இரண்டு சிறுவா்களும் ஒன்றாக வெளியே சென்று காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா்.

ரிஷப்பின் தந்தைக்கு யாரோ ஒருவா் தொலைபேசியில் அழைத்து, சிறுவா்கள் கடத்தப்பட்டதாகக் கூறி ரூ.30,000 கப்பமாக கேட்டிருந்தாா். இது குறித்து சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், சமீம் (25) என்பவரை போலீசாா் கைது செய்தனா். அவரும் அவரது நண்பா்களும் சிறுவா்களைக் கடத்தி எஸ்எம்ஜி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தனா். ரிஷப்பை ஒரு சந்திப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இரு சிறுவா்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றிருந்தாா்.

கடத்தல்காரா்கள் ரிஷப்பின் தந்தையிடம் பணம் கேட்டனா். குடும்பத்தினா் சமீமின் தொலைபேசிக்கு ரூ.5,000 அனுப்பினா். போலீசாா் தொலைபேசியைக் கண்டுபிடித்து அவரைப் பிடித்தனா். சமீம் மீது ஏற்கெனவே 4 வன்முறை வழக்குகள் உள்ளன. இப்போது, குற்றத்தில் அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க போலீசாா் முயற்சித்து வருகிறோம் என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.