ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.
ஏர் இந்தியா விமான விபத்து நேரிட்ட இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்த 241 பேர் பலியான நிலையில், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்களும் பலியாகியிருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண்ணாக இருந்த மும்பையைச் சேர்ந்த சைனீதாவும் இந்த விபத்தில் பலியாகியிருக்கிறார்.
மும்பையில், அவரது தாய் மற்றும் தந்தையால், பணிக்குச் சென்ற மகள் திரும்ப வரமாட்டாள் என்ற உண்மையை ஏற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் ஏற்பதற்கில்லை.
ஆறுதல் சொல்ல வருவோரிடமெல்லாமல், ஒரே ஒரு நாள் விட்டுவிடுங்கள். அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள் பாருங்கள் என வீட்டின் கதவைப் பார்த்தபடியே இருக்கிறார் சைனீதாவின் தாய்.
தனது பெண்ணின் குழந்தைப் பருவ சுட்டித்தனங்கள் குறித்துச் சொல்லி சொல்லி மாய்கிறார். அவரது நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாத உறவினர்கள், செய்வதறியதாது தவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம்: இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து!
உறவுப்பாலம்

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: கோடைக்கால விமான சேவை 10% குறைப்பு!

மேற்காசிய போா்: விமானப் போக்குவரத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


