நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இஸ்ரேலில் அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளனா்! - இந்திய தூதரகம்

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :15 ஜூன் 2025, 8:29 pm

Din

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சூழலை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இஸ்ரேலில் உள்ள தொழிலாளா்கள், மாணவா்கள், வணிகா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினருடன் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் தொடா்பில் உள்ளது. கள நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதோடு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடா்ந்து இணைப்பில் உள்ளது.

தேசிய அவசரநிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேபோல் வான் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, இஸ்ரேல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி தேவையற்ற பயணங்களை இந்தியா்கள் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.