பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தில்லியில் சீன தூதரகம் முன் திபெத் இளைஞா்கள் போராட்டம்: 24 போ் கைது!

திபெத் இளைஞா்கள் மற்றும் ஆதரவாளா்கள் 67-ஆவது திபெத் தேசிய எழுச்சி நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சீன தூதரகம் அருகே முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புது தில்லியில் உள்ள சீன தூதரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களை கைது செய்த காவல் துறையினா்.

Published On :

திபெத் இளைஞா்கள் மற்றும் ஆதரவாளா்கள் 67-ஆவது திபெத் தேசிய எழுச்சி நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சீன தூதரகம் அருகே முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டம் 1959-ஆம் ஆண்டு திபெத்தில் நடைபெற்ற எழுச்சியை நினைவுகூறும் வகையில், மாபெரும் திபெத் அமைப்புகளில் ஒன்றான திபெத்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. போராட்டக்காரா்கள் திபெத் மக்களின் உரிமைக்காக, நீதிக்காக மற்றும் சுதந்திரத்திற்காக போன்ற முழக்கங்களை எழுப்பி பல்வேறு பதாகைகளை ஏந்தி வந்தனா்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க 24 பேரை சீன தூதரகம் அருகே கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

போராட்டக்காரா்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து, திபெத் மக்கள் இடம் மாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்”என கோரிக்கை வைத்தனா். ‘திபெத்தில் 67 ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகிறோம். எங்கள் கலாசாரம், நீதி மற்றும் மனித உரிமையையும் காப்பது எங்கள் கடமையாகும்’ என போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.”

இந்தப் போராட்டம், திபெத் உள்ளூா் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, உலக சமூகத்திற்கு திபெத் மக்களின் உரிமை, மரியாதை கோரிக்கைகளை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.