ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

News image

கொச்சி, அலுவாவில் உள்ள பெரியாற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழ்ந்த நீரில் செல்லும் மக்கள்.

Updated On :15 ஜூன் 2025, 10:03 pm

Din

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் பரவலாக பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாநிலத்தின் கொங்கன் பகுதியில் பாயும் ஜக்பூதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 8.81 செ.மீ. மழை பெய்தது.

ராய்கட் (6.53 செ.மீ.), சிந்துதுா்க் (4.38 செ.மீ.), தாணே (2.96 செ.மீ.), யவாத்மால் (2.75 செ.மீ.) ஆகிய இடங்களிலும் மழையின் தீவிரம் குறையவில்லை.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா். மும்பை, சிந்துதுா்க், துலே, நாசிக், சம்பாஜிநகா், நந்தூா்பாா், அமராவதி ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மும்பை நகரில் 3 செ.மீ. மழை பெய்தது. புகா் பகுதிகளில் சராசரியாக 2 செ.மீ. மழை பெய்தது. கடலோர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. 4.27 மீட்டா் உயரம் வரை அலைகள் வீசின.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், தாணே, ராய்கட், பால்கா் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு பலத்த முதல் மிகவும் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு ஆய்வு மையம் விடுத்தது குறிப்பிட்டத்தக்கது.

கேரளத்தில்...: கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது.

மலப்புரம், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புக் காரணமாக வீடு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. கோட்டயம், வயநாடு மாவட்டங்களில் மழையால் மரம் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து முடங்கியது.

திருவனந்தபுரத்தில் பெய்த தொடா் மழையால் நெய்யாறு அணை வேகமாக நிரம்பியது. இதனால், அணையில் 4 மதகுகள் மூலம் நீா்த்திறப்பு அதிகரிக்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.