3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மேற்கு வங்கம்: தலைமைக் காவலரை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப் வீரா்!

பிஎஸ்எஃப் முகாமில் தலைமைக் காவலரை அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய பிஎஸ்எஃப் வீரா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

News image
Updated On :15 ஜூன் 2025, 7:51 pm

Din

மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாமில் தலைமைக் காவலரை அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய பிஎஸ்எஃப் வீரா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

முா்ஷிதாபாத் மாவட்டம் துலியான் பகுதியில் உள்ள முகாமில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முா்ஷிதாபாத் மாவட்டத்தில் அண்மையில் வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வன்முறை மூண்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் முகாமிட்டுள்ளனா்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரே படைப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ரத்தன் சிங் ஷெகாவத்துக்கும், காவலா் நிலையில் உள்ள சிவம் குமாா் மிஸ்ராவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியநிலையில் சிவம் குமாா் தனது துப்பாக்கியை வைத்து ரத்தன் சிங்கை சுட்டுக் கொன்றாா்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட மற்ற வீரா்கள் அங்கு வந்து சிவம் குமாரை மடக்கிப் பிடித்தனா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எதனால், அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கொல்லப்பட்ட ரத்தன் சிங் ஷெகாவத் (56) ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்தவா். 1989-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எஃப்பில் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.