கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளத்தின் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை பதிவானது.
அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் வயநாடு அலட்டில் 178 மி.மீ., படிஞ்சரத்தராவில் 162 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி, திருச்சூர், பத்தினம்திட்டா, கோழிக்கோடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
இன்றும் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை!

கேரளத்தில் 1.39 கோடி பெண் வாக்காளர்கள்... ஆனால், களத்தில் வெறும் 40 பெண் வேட்பாளர்கள்!

பெண்களுக்கு இலவச பேருந்து, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000! கேரளத்தில் ராகுல் வாக்குறுதி!
மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் இடதுசாரி அரசு! - ராகுல் காந்தி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


