கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக் குற்றம் சாட்டி காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
போராட்டத்தின் போது சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. தர்மேந்திர பிரதானின் ராஜிநாமைவையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது:
உண்மையிலேயே, மாணவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறதா? ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளது அம்மாநில அரசு. என்ன ஒரு பாசாங்குத்தனமான நிலைப்பாடு?
போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற மத்திய அரசே ஒப்புக் கொண்ட பிறகும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மாணவர்கள் மீது உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், கேரள அரசு பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற ராகுல்காந்தி உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்தில் கேரளத்துக்கும் தில்லிக்கும் வெவ்வேறு நிலைப்பாடா? என்று பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Does the Congress really stand with the cause of the students' agitation? The Kerala government has indiscriminately filed criminal cases against those who protested in solidarity with the students' agitation at Jantar Mantar. What a hypocritical stand! Such double standardsâ¦
— Pinarayi Vijayan (@pinarayivijayan) July 28, 2026
Summary
Opposition Leader Pinarayi Vijayan has criticized the Congress government for registering cases against 5,000 people who staged protests in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாங்சுக் மீதான போலீஸ் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்!

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன்!

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

பாஜகவின் நலனுக்கு உதவுகிறாரா ராகுல் காந்தி? பினராயி விஜயன் காட்டம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2




