புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விமான விபத்து: ஒரே சவப்பையில் 2 தலைகளுடன் ஒரு உடல்! தடயவியல் குழுவினருக்கு சிக்கல்!!

விமான விபத்தில் மீட்புப் பணியின்போது ஒரே சவப்பையில் இரண்டு தலைகளுடன் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்ததால் தடயவியல் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image

விபத்து நேர்ந்த இடம்

பிடிஐ

Updated On :16 ஜூன் 2025, 4:47 am

DIN

ஒரு டிஎன்ஏ பரிசோதனையை செய்து முடித்து உடலை அடையாளம் காண்பதற்கு குறைந்தது 72 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், ஒரே சவப்பையில் இரண்டு தலைகளுடன் ஒரு உடல் வைக்கப்பட்டிருந்ததால், தடய அறிவியல் குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேரின் உடல் பாகங்கள் ஒரே பையில் வைக்கப்பட்டிருப்பதால், டிஎன்ஏ சோதனையை மீண்டும் தனித்தனியாக இருக்கும் உடல் பாகங்களுக்கு மேற்கொண்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது என்று தடய அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.

இதுவரை ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களில் டிஎன்ஏ சோதனையின் மூலம் 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 14 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

மீதமுள்ள உடல்கள் மற்றும் உடல்பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உறவினர்களை இழந்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் முழுமையான உடல்களை அதிகாரிகள் அளிப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிலரோ, தங்களது உறவினர்களின் முழுமையான உடல் பாகங்களை அளிக்குமாறு அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை சமாதானப்படுத்துவது என்பது இயலாததாகிவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் கருகிய நிலையில் இருக்கும் உடல் பாகங்கள் அனைத்தையும் மிகச் சரியாக எடுத்து முழுமையாக உடல் பாகங்களை ஒப்படைப்பது என்பது இந்த விபத்தில் இயலாதது என்கிறார்கள்.

அதாவது, உடல்பாகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பைகளில் டிஎன்ஏ பொருந்தாத பாகங்களை அப்படியே வைத்துவிட்டு, அதனை குளிர்பதன கிடங்குக்கு மாற்றிவிடுகிறோம். முழுமையான தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு, இறுதியில் அடையாளம் காணப்பட்ட உடல் பாகங்களை மட்டும் சவப்பெட்டிகளில் வைத்து குடும்பங்களிடம் ஒப்படைப்பது தான், நிலையான மருத்துவ நெறிமுறை. அதனை தற்போது பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.