வடகிழக்கு கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அந்நாட்டு எம்.பி. உள்பட 15 பேரும் உயிரிழந்தனா்.
வடக்கு சாந்தாண்டோ் மாகாணத்தில் உள்ள குகுடா நகரில் இருந்து ஓகானா நகரை நோக்கி, அரசுக்குச் சொந்தமான சடேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டது.
சுமாா் 40 நிமிஷ பயண இலக்கைக் கொண்ட இந்த விமானம், புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குராசிகா மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.
இது குறித்து தகவலறிந்ததும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். எனினும், விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 15 பேரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா்.
உயிரிவந்தவா்களின் கொலம்பியா பிரதிநிதிகள் சபை (நாடாளுமன்ற கீழவை) உறுப்பினா் டியோஜெனெஸ் குயின்டெரோவும் ஒருவா் என உறுதிப்படுத்தப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
Plane crash in Colombia! 15 people killed, including an MP!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!
கொலம்பியா: பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!

சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



