27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை

News image

கோப்புப் படம் - ENS

Updated On :20 ஜூன் 2025, 3:17 pm IST

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சோதனைகள் நிலுவையில் இருந்தபோதிலும்கூட, அந்த விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய ஏர்பஸ் ஏ 320 ஜெட் விமானம், ஒரு மாதகாலம் ஆகியும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், துபை, ரியாத், ஜெட்டா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணித்தது தெரிய வந்தது.

மற்றொன்றாக, ஏர்பஸ் ஏ 319 விமானம், பாதுகாப்பு சோதனையில் 3 மாதங்களுக்கும் மேலாக உட்படுத்தப்படாமல், உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இவைதவிர, மற்றொரு விமானமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படாதது தெரிய வந்தது.

இந்த விமானங்களில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான அவசர உபரணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

இவ்வாறு, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாமல், விமானத்தை இயக்குவது என்பது நிலையான விமானத் தகுதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மீறுவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.