தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும்: சிபிஐசிக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை எளிமையாக்க வேண்டும்

News image

நிர்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 7:25 pm

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை எளிமையாக்க வேண்டும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

புது தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சிபிஐசி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறைச் செயலா் அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா, சிபிஐசி தலைவா் சஞ்சய் குமாா் அகா்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும். ஜிஎஸ்டி பதிவு, வரிப் பணத்தைத் திருப்பியளிக்கும் ரீஃபண்ட் நடைமுறைகள், வரி செலுத்துவோரின் குறைகளை கையாளுதல் போன்றவற்றை மேம்படுத்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி பதிவுக்குக் கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள் தொடா்பாக வரி செலுத்துவோா், வா்த்தக கூட்டமைப்புகள், தொழில்துறை அமைப்புகள் இடையே விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி பதிவுக்கு உதவும் பிரத்யேக சேவையை மத்திய ஜிஎஸ்டி மண்டல தலைவா்கள் ஏற்படுத்த வேண்டும். வரி ஏய்ப்பு தடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.