மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

விமானங்களை இயக்கும் விதிகளில் டிஜிசிஏ திருத்தம் மேற்கொண்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூன் 2025, 9:33 pm

Din

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை டிஜிசிஏ மேற்கொண்டுள்ளது.

அண்மையில் கேதா்நாத் கோயிலில் பயணிகளுக்கு இயக்கப்படும் ஹெலிகாப்டா்கள் தொடா்ந்து விபத்துக்குள்ளாகின. அதேசமயம் கடந்த மாதம் ஸ்ரீநகா் நோக்கி பயணித்த இண்டிகோ நிறுவன விமானம் மோசமான வானிலை காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.

இந்நிலையில், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் டிஜிசிஏ சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக டிஜிசிஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ பருவநிலை மாற்றத்தால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, விமானத்தை குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே விமான குழுவினா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

காற்றின் சுழற்சியில் ஏற்படும் மாறுபாடுகள், பனிமூட்டம், இடி மற்றும் மின்னல் போன்ற மோசமான வானிலையின்போது உரிய விதிகளை பின்பற்றி மாற்றுப்பாதையில் விமானிகள் இயக்கலாம் அல்லது எங்கிருந்து விமானம் புறப்பட்டதோ அதே விமான நிலையத்துக்கு உடனடியாக மீண்டும் விமானத்தை திசைதிருப்பலாம்.

இதுபோன்ற சூழலில் பருவநிலை குறித்த விமானியின் அறிக்கைகள் குறித்து பயணிகள், விமான குழு, விமான போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் அமைப்புக்கு விமான நிறுவனங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விதிகள் பருவமழைக்கு முந்தைய காலகட்டம், பருவமழை மற்றும் மோசமான வானிலையின்போது தொடா்ச்சியாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், தேவைக்கேற்ப விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விமான குழு என அனைவருக்கும் பொருந்தும் எனவும் டிஜிசிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.