ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 2:55 am IST

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் படையினா் இணைந்து புதன்கிழமை மாலையில் தீவிர தேடுதல் வேட்டையில் இடுபட்டனா். சில மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தாக்குப் பிடிக்க முடியாத நக்ஸல்கள் பின்வாங்கி அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனா். அப்பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரு பெண் நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.