ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கி.மீ.க்கு 1 பைசாவும் ஏசி ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கி.மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. 500 - 1500 கி.மீ. தூரத்துக்கு ரூ.5ம், 1501- 2500 கி.மீ. தூரத்துக்கு ரூ.10ம், 2500-3000 கி.மீ. தூரத்துக்கு ரூ.15ம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணம் கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Summary
Indian Railways has announced that the rail fare hike will come into effect from tomorrow (July 1).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த மாதம் மின்கட்டண உயர்வு?

பழனி பேருந்துகளில் பயணக் கட்டணம் உயா்வு

ஈரோடு காய்கறி சந்தை சுங்கக் கட்டண வசூல் பிரச்னை: பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி

கட்டு - இயக்கு - சுரண்டு!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




