அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மார்ச் 2025, 3:54 pm IST

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

திரிபுரா மாநிலத்தில் ரகசிய தகவல் வந்ததையடுத்து பிஎஸ்எஃப் மற்றும் சுங்கத் துறை இணைந்து கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக அவர்கள் தெற்கு மாவட்டத்தில் உள்ள சோட்டாகில் இரண்டு வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 100 கிலோ கஞ்சாவை மீட்டதாக சுங்கத் துறை கண்காணிப்பாளர் எல்பின் சிங் தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஐபோன் மற்றும் ரூ.1,49,000 ரொக்கம் உள்பட 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் சப்ரூம் உட்பிரிவில் உள்ள லிலாகர் தேயிலை தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.