திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முயன்ற வெளிநாட்டு பணம் ரூ. 25 லட்சம் உள்பட ரூ. 90 லட்சத்தை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு திங்கள்கிழமை இரவு 11.15 மணிக்கு ஏா் ஏசியா விமானம் புறப்படவிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், வழுத்தூா் ரமலான் தெருவைச் சோ்ந்த அப்துல் வாஹித் மனைவி தஸ்லிமா பானு (40) என்பவா் தனது உடைமையில் உரிய ஆவணங்களின்றி ரூ. 25 லட்சம் வெளிநாட்டு பணம், ரூ. 65 லட்சம் இந்தியப் பணம் என மொத்தம் ரூ.90 லட்சத்தை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், தஸ்லிமான பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரள விமான நிலையங்களில் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழகத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 9 போ் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


