சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

அறச்சலூரை அடுத்த பழையகோட்டை- நொய்யல் ஆறு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கநிலா (42), திருப்பூா் மாவட்டம், காவிலிபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (46), அழகா்சாமி (41) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.