தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

மகா கும்பமேளா நிறைவுபெற்றாலும் அயோத்தி பக்தர்கள் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.

News image
அயோத்தி ராமர் கோயில்
Updated On :3 மார்ச் 2025, 10:55 am

DIN

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கி கோயில் நிர்வாகம் கொண்டுவந்த புதிய கட்டுப்பாட்டால் மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதக் காலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களால் மாநகராட்சி நிர்வாகம் புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் காலணிகளை கோயிலின் நுழைவுவாயிலிலேயே விட்டுச் செல்கின்றனர்.

கோயிலில் எங்குப் பார்த்தாலும் காலணிகளாகவே உள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட காலணிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் தான் என்ன என்று அதிகாரிகள் விசாரித்ததில் கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுவதாவது,

மகா கும்பமேளாவைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் திரளானா பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் ராமர் கோயிலின் முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். அதன்பின்னர் கோயிலைச் சுற்றிப்பார்த்து தரிசனம் முடித்த பிறகு சுமார் அரை கி.மீ நடந்து சுற்றுப்பாதையை முடிக்கின்றனர். மீண்டும் தங்கள் காலணிகளைச் சேகரிக்க அதே முதல் நுழைவுவாயிலுக்கு வரவேண்டிய சூழல் நிலவுகிறது.

பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதால், ராமரை தரிசித்துவிட்டு பக்தர்கள் மூன்றாவது நுழைவுவாயிலில் வெளியேறுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தங்கள் காலணியைச் சேகரிக்க மீண்டும் ராமர் வழித்தடத்தில் அதாவது சுமார் 5 - 6 கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதுவே லட்சக்கணக்கான காலணிகள் குவிந்ததற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.

பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் நுழைவுவாயில் மாற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறினார். தினமும் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகளை ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி காலணி குவியலை அகற்றி டிராலிகளில் ஏற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.