காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3% ஆக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7% இருந்தது.

கோப்புப் படம்

Published On :

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது.

2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், தற்போது 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய சந்தைககளுக்கான உற்பத்தியில் பலவீனமான வளர்ச்சி மற்றும் விற்பனை ஆகியவற்றால் உற்பத்தி கொள்முதலும் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறை தரவுகளைத் தொகுத்து வழங்கும் எஸ்&பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநரான பிரஞ்சுல் பந்தாரி, பிப்ரவரியில் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் இது 57.7 சதவீதமாக இருந்தது.

இந்திய உற்பத்தித் துறையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் உலகளாவிய தேவை வலுவாகவே உள்ளது. இது கொள்முதல் நடவடிக்கைகளையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

தொழில் துறை விரிவாக்கமும் வலிமையாக நடந்துவருகிறது. இது கனிசமான உற்பத்தியை இந்த ஆண்டில் உருவாக்கும்.

உற்பத்தியில் நிலவும் பலவினமானபோக்கு 2023 டிசம்பர் மாதத்தில் இருந்தே நீடித்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிப்ரவரியில் தொழில் துறை நேர்மறையாகவே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.