ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்களின் நெருக்கடி குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ராஜ் டிசன்ஹா கேள்வி எழுப்பினார்.
அதற்கு கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் அளித்த பதிலில்,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட சுமார் 7,930 அரசுப் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் சுமார் 3.81 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் 103 பள்ளிகளில் ஒரு மாணவர்களும் இல்லாமல் இயங்குவதாகவும், அவற்றில் 17 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக அந்தந்தப் பகுதிகளில் "ஸ்கூல் சலோ அபியான்" முறையில் நாங்கள் பிரசாரத்தை நடத்தி வருகிறோம். மேலும் 26 ஆயிரம் உதவி ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி கிடைக்காததால் அதிருப்தி!

தனியாா் பள்ளிகள் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் அடித்துக் கொலை!

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


