ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைத்தியநாத் ராம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பல அமைச்சர்களின் முன்னிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் அவர் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.
சட்டப்பேரவைச் செயலாளர் ரஞ்சித் குமாரிடம் வேட்புமனுக்கள் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேஎம்எம்-யின் இணை நிறுவனர் ஷிபு சோரனின் மறைவைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை இடங்களுள் ஒன்று காலியானது. மற்றொரு இடம் பாஜக உறுப்பினர் தீபக் பிரகாஷின் ஆறு ஆண்டு பதவிக்காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மாநிலங்களைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 1 தொடங்கி நிலையில், ஜூன் 8 (இன்று) வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வெற்றிபெற, ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 28 வாக்குகளைப் பெற வேண்டும்.
Summary
Former minister Baidyanath Ram on Monday filed his nomination as a Jharkhand Mukti Morcha (JMM) candidate for one of the two Rajya Sabha seats in the state going to polls.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











