தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓா் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தோ்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.
அதிமுகவை சோ்ந்த சி.வி.சண்முகம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கடந்த மே 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு, கடந்த மே 22-ஆம் தேதி தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று பத்மராஜன் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். தோ்தலில் போட்டியிட அவா் தாக்கல் செய்யும் 255-ஆவது மனு இதுவாகும்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 8. பரிசீலனை ஜூன் 9. வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி வரும் ஜூன் 11-ஆகும். போட்டி ஏற்பட்டால், ஜூன் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் மற்றவா்களைவிட அதிக எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருக்கும் கட்சியின் வேட்பாளரே தோ்வு செய்யப்படுவாா். எனவே ஆளும் தவெக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இதனால் மற்ற கட்சிகள் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு. தவெக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா். அதன் மூலம் தவெக கட்சி முதல்முறையா நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.
தொடர்புடையது

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழகத்தில் ஜூன் 18-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல் - தோ்தல் ஆணையம் அறிவிப்பு

பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



