பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது

News image
Updated On :7 மார்ச் 2025, 3:19 am IST

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பாா்படாஸின் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சாா்பாக மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா இந்த விருதைப் பெற்றாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கயானா நாட்டின் ஜாா்ஜ் டவுனில் கடந்த ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற 2-ஆவது இந்தியா-கரிகாம் தலைவா்கள் உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியுடனான சந்திப்பில் பாா்படாஸ் பிரதமா் மியா அமோா் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

கரோனா பெருந்தொற்றின்போது பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக மோட்லி குறிப்பிட்டாா். தொற்றுநோய் பரவல் காலத்தில், அன்றைய முன்னோடியில்லாத சூழ்நிலையில் சா்வதேச ஒத்துழைப்பையும் ஆதரவையும் வலுப்படுத்துவதில் பிரதமா் மோடி முக்கியப் பங்காற்றியதாவும் அவா் பாராட்டினாா்.

கடந்த 1966-ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் தொடங்கியதில் இருந்து, இந்தியாவும் பாா்படாஸும் தொடா்ச்சியான ஈடுபாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் ஒரு வலுவான ஒத்துழைப்பை வளா்த்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் சாா்பாக விருதைப் பெற்ற இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா, பாா்படாஸ் நாட்டின் இந்த அங்கீகாரத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், அவா் சாா்பாக இந்த மதிப்புமிக்க விருதை பெற்றுக்கொள்வதும் பெரும் மரியாதையாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கும் பாா்படாஸுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும், குறிப்பாக நெருக்கடி காலங்களில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நமது பகிரப்பட்ட அா்ப்பணிப்பையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.