வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை!

இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தற்கொலை செய்துகொண்டது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :7 மார்ச் 2025, 8:45 am

DIN

தில்லி வெளியுறவுத் துறை அமைச்சக குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து இந்திய வெளியுறவு சேவை(ஐஎஃப்எஸ்) அதிகாரி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

முதல்கட்டத் தகவலில், தற்கொலை செய்துகொண்டவர் ஜித்தேந்திர ராவத் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய தில்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியிருப்பில் முதல் மாடியில் ஜித்தேந்திர ராவத் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி வசித்து வந்தார்.

இவர், தனது தாயுடன் வசித்து வரும் நிலையில், இன்று காலை 6 மணியளவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியும் குழந்தையும் டேராடூனில் இருந்து தில்லிக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.